பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையன்று, அத்துறை சார்பில் சட்டப்பேரவையில் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவணப் புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள புள்ளிவிவரங்களும் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களும் மிகப் பெரியளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், 'கல்வித் துறை மாநில தகவல் முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் புள்ளிவிவரங்களும் அலுவலர்கள் அளித்த புள்ளி விவரங்களும் வேறுபட்டு இருக்கிறது.