சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சண்முகம். காவலாளியாக பணியாற்றி வரும் இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும் லாவண்யா (17), புவனேஸ்வரி (14) என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சண்முகமும் லட்சுமியும் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் அவரது மூத்த மகள் லாவண்யாவும் பள்ளிக்குச் சென்றுவிட்டார். ஆனால், புவனேஸ்வரி நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த லாவண்யா வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வீட்டிற்கு விரைந்த பெற்றோர் மகளின் உடலைக் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.