சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் டெபாசிட் (வைப்புத்தொகை) இயந்திங்களைக் குறிவைத்து ஹரியானா மாநில கொள்ளைக்கும்பல் நூதனமுறையில் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.
வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளின் ஏடிஎம் வைப்புத்தொகை இயந்திரங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்தனர்.
பின்னர் குற்றவாளிகளைத் தேடி ஹரியானா சென்ற தனிப்படையினர் ஜூன் 23ஆம் தேதி அம்மாநில மேவாட் மாவட்டத்தில் வைத்து அமீர் அர்ஜ் என்பவரைக் கைதுசெய்தனர்.