தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அரசு வெறும் விளம்பர அரசு - சசிகலா விமர்சனம் - பொங்கல் பரிசு

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு வெறும் விளம்பர அரசாகவே செயல்படுகிறது என சசிகலா விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 24, 2022, 11:03 PM IST

சென்னை: திமுக அரசு வெறும் விளம்ப அரசாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து இன்று (டிச.24) அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்? என்பதை தொண்டர்கள் சொல்ல வேண்டும்.

அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் நான் தான். பொங்கல் பரிசில் கரும்பு வழங்காதது விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். பொதுமக்களுடைய பிரச்சனை என்ன என்பதை கேட்பதை விட்டுவிட்டு எங்களுடைய உட்கட்சி பிரச்சனையை மட்டும் தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள்.

திருநெல்வேலி பகுதிகளில் இன்னும் பால் அட்டை வழங்கவில்லை. ஆனால், ஆவின் இனிப்பகம் வழங்கி வருகிறீர்கள். இது தற்போது அவசியமா?. அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். திமுகவை விட அதிக ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது அதிமுக.

எங்களால் தான் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் மக்களுக்கான திட்டங்கள் என கொண்டு வந்தோம். திமுகவிற்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று தான், நான் பயணித்து கொண்டிருக்கிறேன். திமுக அரசு வெறும் விளம்ப அரசாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான பேச்சு வார்த்தைகளை ஏற்கனவே தொடங்கி விட்டேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்.. கரூர் தேர்தலில் திடீர் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details