தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளாக கருதப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக அடிக்கடி வெளியில் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “மக்கள் வெளியே செல்லும்போது ஏற்படும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உதவியுடன் மாநகராட்சி இணைந்து நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கவுள்ளது.
இந்த நடவடிக்கைகளினால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக கூட்டமாக நிற்கும் நிலை தவிர்க்கப்படும். இதனால் நோய்த் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.