சென்னை:பெருநகரம் காவல் துறை விபத்தைக் குறைக்கும் வண்ணம் இருசக்கர வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே, மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
அபராதத் தொகை ரூ.10,000 என்பது அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. ஆனால், நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நாட்களில் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக 8,227 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
எனவே, இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னையில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நேரில் 7 நாட்களில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்விளைவாக சென்னை போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 358 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும், பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால் அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும் அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும் இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர்.