சென்னை:சென்னையைச் சேர்ந்த இ-லேர்னிங் கல்வி நிறுவனம் அக்னைட்.
இந்நிறுவனம் முன்னதாக டெலி டேடா இன்பர்மேடிக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டது. வேளச்சேரி - தாம்பரம் சாலை, அண்ணா சாலை க்ளப் ஹவுஸ் சாலை ஆகியப் பகுதிகளில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் சுமார் 310 கோடி ரூபாய் கடன் பெற்று பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில், நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன், இயக்குநர் பத்மநாபன் உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று டெலி டேடா மெரைன் என்ற நிறுவனத்தின் பெயரிலும், எஸ்பிஐ வங்கியில் சுமார் 166 கோடி ரூபாய் அளவிலும் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக சென்னை சிபிஐ அலுவலர்கள் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர்.
மொத்தமாக 479 கோடி ரூபாய் தொழில் மேம்பாட்டிற்காக கடன்பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.