தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்!

By

Published : Jul 13, 2022, 10:17 PM IST

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில்முகக்கவசம் அணியாத 2,340 பேருக்கு 11.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்!
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சி குழுக்களின் மூலமாக கடந்த 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,340 பேரிடம் இருந்து 11.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:எட்டப்பர்களை வைத்து வீழ்த்தி விடலாம் என நினைக்காதீர்கள் ஸ்டாலின்! - ஈபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details