சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் நல்லதம்பி சாலையில் அப்துல் ரஹ்மான் என்பவர் புதியதாக துணி கடை ஆரம்பித்து நான்கு மாதங்களாக நடத்திவருகிறார். இந்தத் துணிக்கடைக்கு வந்த நான்கு பேர் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு புதியதாக துணி எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தாமல் வெளியே செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் வாங்கிய துணிக்கான பணத்தை செலுத்துமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள், பட்டாகத்தி கையில் இருப்பதாகவும் இப்போதுதான் ஜெயிலில் இருந்து வெளி வந்து, புதிய துணி இல்லாததால் வாங்க கடைக்கு வந்ததாகவும் கூறி மிரட்டிவிட்டுச் சென்றனர்.