சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சர்ச் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (70). அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவரது மனைவி ஷியாமளா (63). பிப்ரவரி 16ஆம் தேதி கண்ணன், சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஷியாமளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ஷியாமளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்துள்ளது, அதில் இந்தியன் வங்கி மேலாளர் விஜயகுமார் என்பவர் பேசுவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் பிரதமர் புதியதாக வயதானவர்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்; அதைச் செயல்முறைப்படுத்த வேண்டுமென்றால் உங்களது வங்கிக் கணக்கு அட்டையில் உள்ள எண், ஏடிஎம் கார்டில் உள்ள 16 டிஜிட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்தால் மட்டுமே அதைச் செயல்முறைப்படுத்த முடியும் என்று அந்த நபர் ஷியாமளாவிடம் கூறியுள்ளார்.
அரை மணி நேரம் பேசிய பின்பு உங்களது தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் அதைக் கூறுங்கள் என்று அந்த நபர் கேட்டவுடன் ஷியாமளாவும் ஓடிபி நம்பர் கொடுத்துள்ளார். ஓடிபி எண்களைப் பெற்று சில நிமிடத்தில் அடுத்தடுத்து 20 ஆயிரமாக என ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை அந்த அடையாளம் தெரியாத நபர் எடுத்துள்ளார்.