தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை மீது கருப்பு சாயம்! - சென்னை தற்போதைய செய்திகள்

பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் பலகை மீது கருப்பு சாயம் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.

பலகை மீது கருப்பு சாயம் ஊற்றி அழிப்பு
பலகை மீது கருப்பு சாயம் ஊற்றி அழிப்பு

By

Published : Apr 13, 2021, 6:44 PM IST

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்று பெயர் இருந்தது. தற்போது கிராண்ட் வெஸ்டன் ட்ரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டு பலகை வைக்கப்பட்டது. பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில், மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை பதிவேட்டில் கிராண்ட் வெஸ்டன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் உள்ளது. தமிழ்நாடு அரசின் பதிவேட்டில் மட்டும் பெரியார் ஈ.வெ.ரா சாலை என பெயர் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

பலகை மீது கருப்பு சாயம் ஊற்றி அழிப்பு

இந்நிலையில் பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு சாயம் ஊற்றி அழித்து உள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மோடி வந்தபோது புதிய பலகை வைக்கப்பட்டது - பெரியார் பெயர்மாற்ற சர்ச்சைக்கு நெடுஞ்சாலைத்துறை பதில்!

ABOUT THE AUTHOR

...view details