சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்தாகின. அதில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தளமான ‘ரீயூனியன்’ என்ற குட்டி தீவிவான செயிண்ட் டெனிஸிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஏர்ஆஸ்ட்ரல் விமானம சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சென்னை வந்து, மறுநாள் சனிக்கிழமை மீண்டும் செயிண்ட் டெனிஸ் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்த குட்டி தீவில் மொத்த மக்கள் தொகையே 1.5 லட்சம் தான். ஆனால் இது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளம். இங்கு புகழ்பெற்ற கோயில்கள், மீயூசியம் மற்றும் கோடை வாசஸ்தளங்கள் இருப்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவு இங்கு சென்று வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக வா்த்தக தளமாகவும் உள்ளது. அங்கு உள்ளவர்களில் கணிசமாக தென் இந்தியர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளனர். எனவே சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த வாராந்திர விமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல், 26 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது.
இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் கரோனா பெருமளவு குறைந்து சகஜநிலை திரும்பியதால் மீண்டும் இந்த விமான சேவையை தொடங்க ஏர்ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் விரும்பியது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் அதற்கு அனுமதியளித்தது.