தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2020, 8:39 PM IST

ETV Bharat / state

கரோனா சிகிச்சைக்கு சித்த மருந்து கண்டறிய ஆராய்ச்சி

சென்னை: கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

chennai
chennai

சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிய சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துணை வேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து கரோனா சிகிச்சைக்கு சித்த மருந்துக்கான ஆராய்ச்சியை தொடங்க உள்ளது.

இதையும் படிங்க:குட்கா வழக்கில் நாளை தீர்ப்பு - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details