குவால்காம், இன்டெல் லேண்ட், சாம்ஸங் ரிஸர்ச் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டவர்களில், 2019-20ஆம் கல்வியாண்டில் 158 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதி உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். ஆனால் 2018-19ஆம் கல்வியாண்டில் 135 மாணவர்களே வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதியைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 1,334 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட முதற்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 20 நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்நிறுவனங்கள் 147 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதி கடிதத்தை அளித்தனர். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட 60 விழுக்காடு அதிகமாகும். மேலும் இந்தாண்டிலிருந்து வேலைவாய்ப்பு முகாமை எம்.டெக். மாணவர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர்.