சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை இருக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களில் ஒரு மின் நிலையத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
27 விழுக்காடு நுகர்வோருக்கான மின் இணைப்பு மட்டுமே முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு மேற்கு மாம்பலம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பழுதை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைக்கப்படும். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த அளவு பாதிப்பும் ஏற்படவில்லை.