தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஏழு தமிழர்களை விடுதலை செய்க' - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் - chief minister stalin

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகோ
வைகோ

By

Published : May 10, 2021, 12:58 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தவறு செய்யாமலே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய் போனது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழு பேரையும் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனதர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். கோடான கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details