சென்னை:எட்டு வயது சிறுமிக்கு, அவருடைய பெரியப்பா முறையுள்ள நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்பு கொண்டார்.