தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை... வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை! - rehearsal arrangement

சென்னை: இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை காவல்துறையினர் பாதுகாப்புப் ஒத்திகை நடத்தவுள்ளனர்.

chennai police

By

Published : Oct 10, 2019, 12:28 PM IST

Updated : Oct 11, 2019, 12:02 PM IST

உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நாளை சென்னைக்கு (அக்.11) வருகை தருகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு இந்தியாவிற்கு மேலும் பெருமை தேடித்தர உள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் ஐந்தாம் நம்பர் கேட் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை

இன்று காலை மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசிய கொடி ஏற்றப்பட்டது. குறிப்பாக இரு நாட்டு தலைவர்களை வரவேற்க தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி வாழை இலை, வாழை மரம், கரும்பு, வெத்தலைக் கொடி ஆகியவற்றில் தோரணங்கள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்குள் செல்வதற்கு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை காவல் துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, சிறப்பான முறையில் திட்டமிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்வதற்காக அவருடைய பாதுகாப்பு வாகனம் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 11, 2019, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details