தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலியாக உள்ள 3,552 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிகளுக்கு நடந்த உடற்தகுதித்தேர்வு - சீருடை பணியாளர்கள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்புத் துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 6, 2023, 10:22 PM IST

காலியாக உள்ள 3,552 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிகளுக்கு நடந்த உடற்தகுதித்தேர்வு

சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில், 2லட்சத்து 99ஆயிரத்து 887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்வை எழுதினர்.

விண்ணப்பித்த 3.66 லட்சம் பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. எழுத்துத் தேர்வில் 15ஆயிரத்து 158 ஆண்கள் மற்றும் 3ஆயிரத்து 513 பெண்கள் என மொத்தம் 18ஆயிரத்து 671 தேர்ச்சிப் பெற்றனர். இந்த நிலையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நபர்களுக்கு அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் இன்று உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. சென்னையில் முதற்கட்டமாக இன்று 350 நபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (பிப்.06) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அவர்களுக்கு மார்பளவு அளவீடுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வானது அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும் எனவும்; இதில் தேர்வாகும் நபர்களுக்கு அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வேலூரில் 2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details