தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் உணவு வழங்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, இஃப்தார் உணவும், நோன்பு கஞ்சியும் வழங்க அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ramzan
ramzan

By

Published : May 15, 2020, 4:47 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக, மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வேளையில் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தையொட்டி, இஃப்தார் உணவும், நோன்பு கஞ்சியும் வழங்க அனுமதியளிக்கக் கோரி, தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷேக் ஃபரீத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:டாஸ்மாக் பதிலாக அரசிற்கு வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்!

ABOUT THE AUTHOR

...view details