ஜூன் மாதத்தில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
Rain update: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - school college leave status

09:18 June 19
27ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
07:49 June 19
நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (19-06-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் பலத்தமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூரூக்குத் திருப்பி விடப்பட்டன.