இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.
மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் காலை 11:30 முதல் பிற்பகல் 3:20வரை வெளியில் செல்வதையும் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.