தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை எதிரொலி: நிரம்பும் மதுராந்தகம் ஏரி; பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின் மதுராந்தகம் ஏரி நிரம்பவுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது

rainfall-impact-across-tamilnadu
rainfall-impact-across-tamilnadu

By

Published : Dec 2, 2019, 8:58 AM IST

Updated : Dec 2, 2019, 10:42 AM IST

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரும் ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 17 அடி வரை தண்ணீர் எட்டியுள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால், கடந்த இரு ஆண்டுகளாக நிறையாத மதுராந்தம் ஏரி நிரம்பவுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் - மணக்குடியை இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு பாலம் ஒன்று கட்டப்பட்டது. கனமழையின் காரணமாக தற்போது கரை பலவீனமாகியுள்ளது. இதனால் கரை வலுவிழந்த இடத்தில் தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கனமழையால் நிரம்பும் மதுராந்தகம் ஏரி

இதேபோல் வடகரை கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேக்தம்டைந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்புகளை மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்யும் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் விவசாயப் பணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சரக்கு வாகனங்கள் என பல்வேறு தரப்பினரின் தொழில்களும் தேக்கமடைந்துள்ளது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழையால் பாதிப்பு

இதையும் படிங்க: மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

Last Updated : Dec 2, 2019, 10:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details