வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெய்யக்கூடிய மழையின் விவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜுன் 09) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜுன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :