தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2019, 10:40 PM IST

ETV Bharat / state

அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஏழு மாவட்டங்களில் மழை!

சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் தகவல்


வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி ஏற்படுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆர்.எஸ் மங்கலத்தில் 16 செ.மீ என்ற அளவிலும், கோத்தகிரியில் 6 செ.மீ என்ற அளவிலும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதையும் படியுங்க:

தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details