தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட சென்னை - டெல்லி ரயில் மீண்டும் இயக்கம் - ரயில்வே அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:34 PM IST

Michaung Cyclone: மிக்ஜாம் புயல் காரணமாக 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 ரயில்களை மட்டும் மீண்டும் இயக்குவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Michaung
ரத்து செய்யப்பட்ட சென்னை - டெல்லி ரயில் மீண்டும் இயக்கம்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (டிச. 2) காலை முதல் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திரா கடற்கரை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு உள்படப் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வழியாகச் செல்லும் 118 ரயில்கள் ரயில்வே துறையால் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில், இரண்டு ரயில்களை மட்டும் திரும்ப இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டி எண்:12615 சென்னை - டெல்லி கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரயிலானது (Grand Trunk Express) டிச.5 ஆம் தேதி வழக்கம் போல் மாலை 6.40 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், வண்டி எண்:12616 டெல்லி - சென்னை சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் (Grand Trunk Express) ரயிலானது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.10 மணி அளவில் வழக்கம் போல் புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெலங்கானா டிஜிபி பணியிடை நீக்கம் - இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details