சென்னை :முதலமைச்சர் ஸ்டாலின் தனது 23 கால வாழ்க்கை வரலாறு பற்றி "உங்களில் ஒருவன் - பாகம் 1” என்ற நூல் எழுதி அதை வெளியிடவுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் பங்கேற்று நூலை வெளியிடுகிறார்.
இவ்விழாவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.