அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முழுமையாக சமூக வலைதளத்தில் நேற்றிரவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியான கேள்வித்தாள்களில், அந்த நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் துணை இல்லாமல் இது போன்று முன்கூட்டியே கேள்வித்தாள்கள் வெளியாக வாய்ப்புகள் இல்லை. அரையாண்டுத் தேர்விற்கான வினாத்தாள்களையே பாதுகாப்பான முறையில், அளிக்க முடியாத கல்வித்துறை முழு ஆண்டுத் தேர்வினை எவ்வாறு நடத்தப் போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.