சென்னை: கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின் போது, கணவர் அப்துல் ரசித், மனைவியிடம் அப்பளம் பொரித்து தருமாறு கேட்டுள்ளார்.
அப்பளம் தருவதற்கு தாமதமானதால் அவர் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி , கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் 28 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், மனைவிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆயிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை, உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே தண்டனை அளிக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.