சாய் ஸ்ரீ ஐயர் ஸ்ரீதரன் என்பவர் குடும்பத்துடன் 10 நாள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 23ஆம் தேதி காமாக்யாவிலிருந்து இருந்து சென்னை வரை காமாக்யா-பெங்களூரு (12510) ரயிலில் புறப்பட்டுள்ளார். அப்போது, ரயிலில் முறையான பராமரிப்பு இல்லை என்றும்; சைவ உணவு கிடைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
அவர் தனது முகநூல் பதிவில், "குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளோம். ரயிலில் முறையான பராமரிப்பு இல்லை, சைவ உணவு கிடைக்கவில்லை. சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். வயதான பெண்கள் உள்ளனர். உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடித்து வருகிறோம். மொழி பிரச்னை உள்ளது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக உதவி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.