சென்னை:சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்களில் சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வந்தே பாரத் ரயிலால் ஒரு தரப்பு மக்களின் ஆதரவையும்மற்றொரு தரப்பு சாமானிய மக்களின் கனவாக மட்டுமே இருந்து வருகிறது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து தான். மேலும் இந்தியாவில், பல்வேறு நகரங்கள் ரயில்பாதை மூலம் இணைக்கப்படுகின்றன. தற்போது, நவீன வசிதகளுடன் அதிவிரை ரயிலாக, 34-வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இதில் தற்போது தமிழகத்தில், சென்னை - மைசூரூ, சென்னை - கோவை, விஜயவாடா - சென்னை, திருநெல்வேலி - சென்னை என நான்கு வந்தே பார்த் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்துக்குள் இயக்கப்படுகின்றன.
வழக்காமக சென்னை சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல, சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் என தினசரி சேவை இருக்கின்றன. இதில் 7.55 மணி நேரத்தில் இருந்து 8.15 மணி நேரமாக பயண நேர ஆகின்றன. சதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர) ரயிலில் 07.05 மணி நேர பயண நேரமாக இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் பயண நேரம் 6 மணி நேரமாக இருக்கின்றன. இதில், கோவைக்கு செல்லும் மற்ற ரயில்களில், படுக்கை வசதி கொண்ட சாதான பெட்டியில் ரூ.325-மும், 3-வகுப்பு ஏசி பெட்டி ரூ.835-மும், 2-வகுப்பு, ரூ.1170-மும் என்று விலை இருக்கின்றன. ஆனால், சதாப்தி ரயிலில் சிசி பெட்டியில் ரூ.1370-மும், ஈசி பெட்டியில், ரூ.2085-மும் என விலை இருக்கிறன. அதேபோல், வந்தே பாரத் ரயிலில் சி பெட்டி, ரூ.1370-மும் ஈசி பெட்டியில், ரூ.2,485 ஆகவும் இருக்கின்றன.
இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்ல, குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வழக்கமான நெல்லை, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு ரூ.395, 3-ஆம் வகுப்பு - ஏசி பெட்டிக்கு ரூ.1,040-ம், 2-ஆம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.1,460 எனக் கட்டணம் உள்ளது. இந்த விரைவு ரயில்களின் தூங்கும் வசதி பெட்டிகளுக்கான கட்டணத்தைவிட ‘வந்தே பாரத்’ ரயிலின் சேர் கார் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருப்பதால் சாமானிய, நடுத்தர மக்கள் பயணிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.