சென்னை: காவல் துறை பயிற்சியாளர்களுக்கான மனநல வாழ்வியல் பயிற்சிப் பயிலரங்கம், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (செப். 20) நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமை தாங்கினார்.
இதில் காவல் துறைப் பயிற்சியாளர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சியை, மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். சைலேந்திரபாபு, பயிற்சி கையேட்டை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.