கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க செயலாளரான வழக்கறிஞர் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதாது என்றும், தற்போது ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.