தமிழ்நாடு

tamil nadu

தொடக்கல்வித்துறை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்!

By

Published : Jun 10, 2023, 10:41 PM IST

தொடக்கக் கல்வித்துறையின் ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை கண்டித்து அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடக்கல்வித்துறை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைப்பு
தொடக்கல்வித்துறை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைப்பு

தொடக்கல்வித்துறை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைப்பு

சென்னை:சென்னை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோருடன் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று (ஜூன் 9) ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே, ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லாமல் இருப்பதால் மாணவர்களை பெற்றோர்கள் நம்பிக்கையுடன் சேர்க்க முன் வரவில்லை என்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நேற்று பள்ளிக் கல்வி இயக்குநருடன் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அத்தோடு தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு என்பதை நிலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, இந்த குழு அறிவித்த மூன்று கட்ட போராட்டங்களை டிட்டோஜாக் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் 23 பாடங்களை நடத்த முடியாத நிலைமை உள்ளது.

இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்கள் உள்ளனர். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மயில், 'அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகள் காலியாக இருப்பதற்கு காரணம், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தலைமை ஆசிரியர் பணியில் 30 வருடம் அனுபவம் பெற்றவர்களை நியமிக்காமல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி நியமிக்க முடியும். அவர்களுக்கு அனுபவம் இருக்காது. எனவே தான், பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு தேவையில்லை என கூறுகிறோம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:’நாங்கள் தவறை ஒப்புக் கொள்கிறோம்’ - தமிழக மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் விளக்கம்.

ABOUT THE AUTHOR

...view details