சென்னையை பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோல்ஸ்டன் கருப்பசாமி தனது நண்பர் தியாகு என்பவருடன் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோல்ஸ்டன் கருப்பசாமி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்த குறும்படம் பெருமளவில் வெற்றியடைந்த காரணத்தினால், ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்ததாகவும், அப்போது நண்பர் ஜெயகிருஷ்ணன் மூலமாக சர்கார் உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிய ஆறுபாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
50 லட்ச ரூபாய் செலவில் போர்க்கொடி என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக ஆறுபாலா கூறியதால், இவரை நம்பி படத்தை தயாரிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். கரோனா காலத்தில் சென்னைக்கு வரமுடியாத காரணத்தினால் old patriotic production பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் பெயரில் வங்கி கணக்கை தொடங்குமாறு ஆறுபாலாவிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.