தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணி கிடையாது.. அதிரடி உத்தரவு.. - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

பொதுத் தேர்வுப் பணிகளில் எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது என்று அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

private school teachers also have public exam duties in tamilnadu
private school teachers also have public exam duties in tamilnadu

By

Published : Mar 12, 2023, 6:04 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை நடத்தும் பணிகளில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே அரசுத் தேர்வுத்துறையால் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "தேர்வு மையத்தின் முக்கியப் பொறுப்பான முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வுமையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம்.

ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது. கடந்த ஆண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு நடப்பு ஆண்டும் அதேபோல ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை 500-க்கு மேல் இருப்பின், ஒவ்வொரு 500 தேர்வர்களுக்கும் ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு கூடுதல் துறை அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும். தேர்வுமையத்தில் 500 தேர்வர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வெழுதும் நாட்களில் தேர்வு மையத்தில் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் துறை அலுவலரை பயன்படுத்தக் கூடாது.

அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை சொல்லித் தரும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும். நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, ஆய்வு அலுவலரால் (முதன்மைக்கல்வி அலுவலர்) குறிப்பிடப்படும் நாளன்று, தலைமையாசிரியர்கள் கட்டாயம் பணிவிடுவிப்பு செய்ய வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாற்றமோ, பணிக்கு வராமல் இருப்பதோ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வாய்மொழி ஆணைகள் கண்டிப்பாக கூடாது.

அறைக் கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல்வேண்டும். பெரிய மாவட்டங்களைப் பொறுத்தவரை சிறிய மண்டலங்களாகப் பிரித்து அதற்குள்ளாக குலுக்கல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்வுமையத்தில் 20-க்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வெழுதும் நாட்களில் அறைக் கண்காணிப்பாளரையும் நிலையான படையினரையும் நியமனம்செய்தல் கூடாது.

காலையில் தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் பயிலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி கட்டடத்தில் எவ்விதமான கட்டடப் பணியோ அல்லது மராமத்துப் பணிகளோ நடைபெறாமல் இருக்க வேண்டும். துப்பரவு பணியாளருக்கும் அனுமதி இல்லை. காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளியைச் சார்ந்த எந்த ஒருபணியாளரும் (பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள்உட்பட) தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது.

எக்காரணங்கொண்டும் அதே பள்ளியின் பணியாளர்களை அலுவலகப் பணிக்கு உட்படுத்தக்கூடாது. மேலும், காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மைய இணைப்புப் பள்ளிகளின் பணியாளர்களும் ஆசிரியர்களும் கூட தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. விடைத்தாட்கள் உரிய வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்வரை யாரையும் தேர்வு மைய வளாகத்திற்குள் வர அனுமதிக்கக் கூடாது. இப்பணி முதன்மைக் காணிப்பாளரையேசாரும். தேர்வு மையத்தின் பெருக்குபவர், கழிப்பறை துப்புரவாளர், தண்ணீர் தருபவர் ஒவ்வொரு தேர்வுக்கும் முதல் நாள் பிற்பகலில் தேர்வு அறைகளை சுத்தம் செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும். தண்ணீர் தருபவரை ஒவ்வொரு தேர்வு நாளன்றும் காலையில் தண்ணீர் குடத்தைக் கழுவி சுத்தம் செய்து 8 மணிக்கு முன்பாகவே தண்ணீர் பிடித்து குடத்தினை மூடி தண்ணீர் குவளையுடன் தேர்வறைகளின் முன்பாக வைத்துவிட்டு 8.30 மணிக்கு தேர்வு மையத்தைவிட்டு வெளியே சென்றுவிடுமாறு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details