சென்னை:வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த நீலவேணி (46), அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலவேணிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனையடுத்து நீலவேணி பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு நீலவேணியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் அதை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நீலவேணி, மருத்துவமனையில் கட்டி நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். செப்டம்பர் 7 தேதி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நீலவேணிக்கு ஒரிரு தினங்களில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.
உடனே நீலவேணி மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை. உடனே நீலவேணி இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் எதும் சொல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நீலவேணி உயிருக்கு பயந்து ஆந்திர மாநிலம் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு நீலவேணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ இருப்பதாக தெரிவித்தனர்.
வயிற்றில் பஞ்சு