தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 9:22 PM IST

ETV Bharat / state

தமிழ்நாடு மாணவரின் படிப்பை நிறுத்த கட்டாயப்படுத்துகிறதா JNU பல்கலைக்கழகம்? என்ன நடந்தது?

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்பார்வையாளர் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாகவும், மாற்று ஆய்வு மேற்பார்வையாளர் வேண்டுமென கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு ஆய்வு மாணவர் வெளியேற்றப்பட்டு உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு பொது பள்ளி அமைப்புக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

JNU பல்கலைகழகம்
JNU பல்கலைகழகம்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த நாசர் முகமது மொய்தீநின் கோரிக்கைக்கு பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழலில், காரண காரியங்கள் நியாயமாக உள்ள நிலையில், பல்கலைகழக தலைவரின் முன்னிலையில் பேசி, அவர் ஒப்புதலுடன் முணைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது மேற்பார்வையாளர் அல்லது தன் ஆசிரியரை மாற்றிக்கொள்ளலாம் என்பது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஒரு சட்டம்.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் முணைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான நாஸர் முகமது மொஹிதீன் தன் மேற்பார்வையாளரான ஷைலஜா சிங் மீது, பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், "சிங் தலைமையில் என்னால் எனது பட்டப்படிப்பை தொடர முடியாது. எனது ஆராய்ச்சிக்கு அவரால் உதவமுடியவில்லை" என ஜே.என்.யு பல்கலைகழக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து பல்கலைகழகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டது.

JNU பல்கலைகழகம்

இந்த விசாரணையின் போது, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் தீர விசாரித்தப் பின், ஷைலஜா சிங்கை மாற்ற வாய்ப்பில்லை என்றும், நாஸருக்கு வேறு மேற்பார்வையாளர் வழங்க முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர் நாஸரின் கடிதத்தில், அவர் பட்டப்படிப்பை தொடர வேண்டாம் என குறிப்பிட்டு இருந்ததை அடுத்து, ஆராய்ச்சியைத் தொடர முடியாத நிலையில், நாஸருக்கு சேர வேண்டிய சம்பளம் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் பதிலுக்கு கல்வியாளர்களின் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது குறித்து கல்வியாளரும் தமிழ்நாடு பொது பள்ளி அமைப்புக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "அது ஏன் சாத்தியமில்லை? இல்லை, காரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவருக்கும் கல்விச் சுதந்திரம் உள்ளது.

வழிகாட்டி மற்றும் ஆராய்ச்சி அறிஞர் எந்தப் பிரச்சினைகளையும் பார்க்க முடியவில்லை என்றால், ஆராய்ச்சி அறிஞர், வழிகாட்டி ஆராய்ச்சி மேற்பார்வையாளரை மாற்றக் கோருவது என்பது இயற்கையான ஒன்று. சில சமயங்களில் வழிகாட்டி/ஆய்வாளர் மேற்பார்வையாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து, ஆராய்ச்சி அறிஞரை வேறொரு மேற்பார்வையாளரின் கீழ் வைக்குமாறு பரிந்துரைக்கலாம், அதற்கான வழிமுறையும் உள்ளது.

JNU பல்கலைகழகம்

தற்போதைய நிலையில், கமிட்டியால் வேறொரு மேற்பார்வையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு ஆராய்ச்சி அறிஞரை மேற்பார்வையிட, அந்தந்த துறையில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஜேஎன்யு தவிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு கல்வியாளர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது உடன்படாமல் இருக்கலாம், அல்லது சில சமயங்களில் அவரது மேற்பார்வையின் கீழ் உள்ள ஆராய்ச்சி அறிஞரின் எந்தவொரு செயலுக்கும் யோசனைக்கும் அவரது அவமதிப்பை பதிவு செய்யலாம்.

உலகம் முழுவதும் பல்வேறு திறன்களில் பணியாற்றி வரும் பல்வேறு துறைகளில் சிறந்த அறிஞர்களை உருவாக்கிய, சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனமான, ஜேஎன்யுவின் கடந்த கால மாணவர்கள், இந்தியாவிலேயே, துருவங்களாக, எதிரெதிர் அரசியல் முகாம்களில் செயல்படுவது என்பது வெட்கக்கேடானது. கல்விச் சுதந்திரத்தின் சகிப்புத்தன்மை என்பது ஜேஎன்யுவின் தனிச்சிறப்பாகும். அதை இழந்தால் ஜேஎன்யு அதன் நம்பகத்தன்மையையும், பெருமையையும் இழந்துவிட்டது.

தரவரிசையோ, அங்கீகாரமோ ஒரு நிறுவனத்திற்குப் பெருமை தருவது அல்ல. எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திற்கும் புகழையும் அங்கீகாரத்தையும் தருவது ஆராய்ச்சியின் தரமும், ஆராய்ச்சி அறிஞரின் பங்களிப்பும் தான். ஜேஎன்யு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, ஆராய்ச்சி அறிஞரை தொடர்ந்து பிஎச்டி முடிக்க அனுமதிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்தை வழங்குகிறது. அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு அப்பால், ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியருக்கும் கல்வி சுதந்திரம் உள்ளது. அதை எந்த அதிகாரமும் மறுக்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:தினை மாவுப் பொருட்களின் விலை குறைகிறது.. 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details