சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை கடந்த 18ஆம் தேதி முதல் பெற்று வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அரசு உத்தரவின் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத வகையில் இணையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 45 வயதிற்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தாங்களும் விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தாங்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கும் வரை விண்ணப்பங்கள் பெறக் கூடாது எனவும், இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.