சென்னை:பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான ஆடியோவை பரப்பி தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்து வருவதாகவும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (Popular Front of India) மாநிலச்செயலாளர் நாகூர் மீரான் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தாகூர் மீரான், 'பாஜக தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் மீது அவதூறு பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தடை செய்யப்படும் என பொய்யான செய்தியை நம்பி அண்ணாமலை தங்களது நிர்வாகிகள் இடையே பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டால் பாஜகவினர் தாக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார், அண்ணாமலை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால், பாஜகவுக்கு ஆபத்து என போலியாக சித்தரித்து வருகின்றனர்.