சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச பல் மருத்துவக் கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
மூன்று நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் இலங்கை, நேபாளம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல் மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பல் மருத்துவத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல் மருத்துவப் படிப்பு என்பது மருத்துவத் துறைக்கு இணையான ஒரு படிப்பாகும். எனவே, பல் மருத்துவம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் ஒப்புதலோடு தாலுகா வாரியாக பல் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.