தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை குடமுழுக்கு குறித்து பிரமாணர் சங்கம் அறிக்கை: பெரியார் வார்த்தைகளில் பொன்வண்ணன் பதிலடி! - ponvannan about kudamulu fest

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தவிருப்பது தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ponvannan
ponvannan

By

Published : Feb 2, 2020, 7:57 PM IST

தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பொன்வண்ணன் இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் என். நாராயணன் எழுதிய இக்கடிதத்தை படிக்க நேர்ந்தது.

இதில் கையெழுத்திட்டுள்ள இவரைப்பற்றி ‘’Metoo‘’ செல்வி சின்மயி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியபோதுதான் எனக்குத்தெரியும்... (அவர்தானே இவர்?)

ஆனால் அதற்கு பிறகு சின்மயி இவரைப்பற்றி எங்கேயும் எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டதால் நானும் மறந்துவிட்டேன்!

சரி.... கடிதத்திற்கு வாறேன்!

இந்த அறிக்கையில் - ‘’எதிர் காலத்தில் ‘’தூயதமிழ் மொழியில்’’ கட்டப்படுகிற கோயில்களில் குடமுழுக்கு செய்திடமுடியும்....’’ என்ற திமிர் பேச்சுக்கு - தமிழ் உணர்வாளர்கள், ஆன்மிகவாதிகள், களத்திலும்-ஊடகத்திலுமாக பதில் கொடுத்து வருகின்றனர்.

அத்தோடு இதில் மூன்றாவதாக ‘’குறிப்பாக நாத்திகர்களும்,பகுத்தறிவுவாதிகளும் இவ் விஷயத்தில் தலையிட்டு கருத்து சொல்வதை வண்மையாக கண்டிக்கிறோம்’’- என குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

இதனடிப்படையில் கடவுளை மறுத்தால் ‘’நாஸ்திகம்’’மறுப்பவர் ‘’பகுத்தறிவுவாதிகள்’’என்று குற்றம் சாட்டப்படுகிறது... இது உண்மையா..?

இதற்கு பெரியார் அவர்களின் குரல் வழியாகவே பதிலளிப்பது சரி என நினைக்கிறேன்.

‘’நாஸ்திகன்’’என்ற சொல்லுக்கு ‘’கடவுள் இல்லை’’ என்ற பொருளில்லை..! வடமொழி ஆதாரங்களில் பார்த்தபடி சொல்கிறேன் …’’நாஸ்திகன்’’என்றால் புராண, இதிகாசங்களை, வேதங்களை, சாஸ்திர தத்துவங்களை பகுத்தறிவினாலே‘’ விவகாரம்-விவாதம் பண்ணுகிறவன் என்று அர்த்தம்.

ponvannan
இந்த விவாதம் ஆரிய புராண இதிகாசங்களை பெரிதும் பாதிப்பதால் ‘’யார் ஒருவர் தங்களுடைய ஆதாரங்களில் கை வைக்கிறார்களோ அவர்களை நாஸ்திகர் எனசொல்லிவிட்டார்கள்.அந்த புராணங்களின்படி பார்த்தால் இராவணன், இரணியன் இருவருமே பல காலம் தவம் செய்து சிவபிரானிடம் வரம்பெற்றவர்கள்தான்..கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான்..ஆனால் இவர்கள் ஆரியமத சம்பந்தமான காரியங்களுக்கு எதிராக இருந்ததால் ‘’நாஸ்திகன்’’என ஆரியர்கள் சொல்லிவிட்டார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது..கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லே...! ஆரியகடவுளையும்...ஆரிய சாஸ்திரங்களையும் …மூட நம்பிக்கைகளையும் …புராணங்களையும் பகுத்தறிவுடன் எதிர்த்து கேள்வி கேட்டால் -நீ’’ நாஸ்திகன்’’ அவ்வளவுதான்...!

அந்த வகையில் என்னை ‘’நாஸ்திகன்’’என்பதை தைரியமாக சொல்லிக்கொள்கிறேன். திருச்சி பொன்மலையில் 1956ல் திரு.குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த -78ஆவது பிறந்த நாளின்போது -பெரியார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பல்வேறு நதிகளிலிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு புனிதநீர் வருகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details