தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1000 பொங்கல் தொகுப்பு திட்டம் - முதலமைச்சர் தொடக்கம்! - Pongal scheme begin tomorrow

சென்னை: குடும்ப அட்டைத்தாரர்களுக்குப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Pongal Scheme
Pongal Scheme

By

Published : Nov 28, 2019, 4:57 PM IST

இந்த ஆண்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்குப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அரிசி, கரும்பு, சர்க்கரை, ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. அதில் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 பேருக்குப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதில் 1 கிலோ பச்சரிசிக்காக ரூ 54.32 கோடியும், 2 அடி நீள கரும்புத்துண்டுக்காக ரூ 29.26 கோடியும், 1 கிலோ சர்க்கரை வழங்க ரூ 92.65 கோடியும், 20 கிராம் முந்திரி வழங்க ரூ 78.02 கோடியும், அவற்றைக் கொண்டு செல்ல துணிப்பைக்காக ரூ 39.01 கோடியும், ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்காக ரூ 1950 .59 கோடியும் இதர செலவினங்களுக்காக ரூ 2 கோடியும் என மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 245.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் காலை 9:45 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details