சென்னை : திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததது மட்டுமல்லாமல், பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர், முறையாக செயல்படாத அதிகாரிகளை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.