தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் விழா - அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து! - தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள்

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், செளந்தரராஜன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

By

Published : Jul 16, 2023, 8:16 AM IST

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய மார்‌க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில், “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் பொதுவாழ்விலும், பொதுவுடைமை லட்சியங்களைக் கடைபிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு” என தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். மேலும் சங்கரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை முதல் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், செளந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் பிரமுகர்களான மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திமுக சார்பில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்தி ஆசி பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் சார்பில் நேரடியாக வந்து வாழ்த்து சொல்லி வாழ்த்தைப் பெற்றோம். சுதந்திரப் போராட்ட வீரர், அப்பெழுக்கற்ற மாபெரும் தலைவர் நம் மாவட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். அவரிடம் ஆசி பெற்றிருக்கிறோம். நீண்ட காலம் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டை ஆற்றிட வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றிருப்பதால் வரவில்லை. இல்லையென்றால் அவரும் வந்திருப்பார்” என கூறினார். மேலும் பேசிய அவர், தியாகி சங்கரய்யாவிற்கு முதலமைச்சர் மதுரை சென்றிருப்பது வரை தெரிந்து உள்ளது என தெரிவித்து உள்ளார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நேர்மையான அரசியலை முன்னெடுக்க, மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள பட்டியில் இன மக்கள், இன்றைக்கும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்ற பெண்களின் உரிமைகள் போன்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவருடைய பிறந்தநாளை இந்த உறுதி ஏற்பை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:காமராஜர் பிறந்தநாள்: விஜய் மக்கள் இயக்கத்தினரால் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details