சென்னை, கே.கே. நகர், காமராஜ் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசிப்பவர் அறிவழகன் (36). இவர் கீழ்ப்பாக்கம் சார்பதிவாளர் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றுகிறார்.
தற்போது, சார்பதிவாளர் அறிவழகன் ஆயிரம் விளக்கு தொகுதி, தேர்தல் பறக்கும் படை அலுவலராக உள்ளார். நேற்று (மார்ச்.18) இரவு நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் அவர் ஈடுபட்டிருந்தார்.