சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (28). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு தனது வீட்டருகே காரை நிறுத்திவிட்டு தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சிவகுரு, திலகர் பாபு ஆகியோர், சிவராஜ் தனது காதலியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், காவலர் சிவகுரு அந்தப்பெண்ணின் செல்ஃபோன் எண், முகவரியை பெற்றுக்கொண்டதோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார். பின்னர், சிவராஜை மிரட்டிய காவலர்கள் அவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.