தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2019, 10:57 PM IST

ETV Bharat / state

தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்!

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

police sets cctv in t.nagar for diwali shopping

தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர்.

இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. எனவே கூட்ட நெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்

பாதுகாப்புப் பணிகளுக்காக கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

மேலும் படிக்க:தீபாவளி சிறப்பு விற்பனை 21ஆம் தேதி முதல் தொடக்கம் - அமேசான் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details