தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளுக்கு மறுவாழ்வு மையம் - காவல் துறை திட்டம் - காவல் துறை திட்டங்கள்

சென்னையில் ஏ-பிளஸ் கேட்டகரி ரவுடிகள் அதிகரிப்பால் காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளுக்கு மறுவாழ்வு மையம் நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளுக்கு மறுவாழ்வு மையம்
திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளுக்கு மறுவாழ்வு மையம்

By

Published : Mar 10, 2022, 1:04 PM IST

சென்னை காவல் துறை மீண்டும் ரவுடிகளை தரம் பிரித்துள்ளனர். கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகளவு ரவுடிகள் உருவாகியிருப்பது சென்னை காவல்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 674 ரவுடிகள் இருந்தது தெரியவந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 711 ரவுடிகளாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது.

அதிலும் ஏ- பிளஸ் கேட்டகரி ரவுடிகள் 69 லிருந்து 92ஆக அதிகரித்திருப்பது சென்னை காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஏ கேட்டகரியில் 229 ரவுடிகளும், பி கேட்டகரியில் ஆயிரத்து 481 ரவுடிகளும், சி கேட்டகரியில் ஆயிரத்து 894 ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக தரம் பிரித்து வைக்கப்பட்டனர். தற்போது ஏ கேட்டகரி 276 ரவுடிகள், பி கேட்டகரி ஆயிரத்து 699 ரவுடிகள், சி கேட்டகரி ஆயிரத்து 644 ரவுடிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 711 ரவுடிகள் அதிகரித்து இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Drive against rowdy elements என்ற ஆப்ரேஷன் மூலம் கடந்த ஆறு மாதத்தில் 130 ரவுடிகளை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஏபிளஸ் கேட்டகரியில் 25 ரவுடிகள், ஏ கேட்டகரியில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், சிடி மணி, கிழங்கு சரவணன் உட்பட பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த வருடத்தில் மட்டும் 99 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 883 சரித்திர பதிவேடு குற்றவாளிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பிரமாண பத்திரத்தை மீறிய 43 ரவுடிகள் கைது சிறையில் தள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறு குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் பெரிய ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டிக்க சென்னை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. திருந்தி வாழ நினைக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வுக்கான பயிற்சி மையம் தொடங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:கார் விபத்து - திமுக எம்பி மகன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details