சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மல்லிகை தெருவைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்-திவ்யா (25) தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (டிச.11) இரவு விக்னேஷ் வேலைக்கு சென்றார்.
இன்று (டிச.12) காலை அவர்களது குழந்தை வெகு நேரமாக அழுதது. உடனே அக்கம்பக்கத்தினர் தம்பதி வீட்டின் கதவை தட்டினர். கதவை திறக்க யாரும் வராததால், அவர்கள் விக்னேஷுக்கு தகவல் கொடுத்தனர்.